எந்த சூழ்நிலையிலும் அவரை கட்சியில் சேர்க்கக்கூடாது எனக் கூறியவர். ஆனால் தற்போது அவரது மனநிலை மாறி உள்ளது என்றால், அதற்கு என்ன காரணம். உண்மையாகவே அவர் அரசியல் கொள்கையோடு இல்லை. உண்மையாகவே ஒரு தலைவரை தலைவராக ஏற்றுக்கொண்டு, அந்தத் தலைவரின் கீழ் பணியாற்றக்கூடிய தொண்டனாக இல்லை. அனைத்துமே தனது சுயநலத்திற்காக கட்சியையும் பயன்படுத்திருக்கிறார், கட்சியின் தலைமையையும் பயன்படுத்திருக்கிறார், தற்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக் கூறி, தனது சுயநலத்திற்காக சசிகலாவையும் பயன்படுத்தி இருக்கிறார் . அதே சசிகலாவை வேண்டாம் எனவும் சொல்லியிருக்கிறார். தற்போது வேண்டுமென்கிறார் என்றால், இவரது சுயநலத்தை வெட்டவெளிச்சமாக இவரே, நாட்டு மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜகவிற்கு வெற்றி கிடைக்கும் என்பது அந்தக் கட்சியின் தலைமைக்கு நன்கு தெரியும். ஓ பன்னீர் செல்வத்திற்கு சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கிடையாது.