பாரத் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இம்மிடிநாயக்கன்பள்ளி அரசுப் பள்ளிக்குரூ.1 லட்சம் நன்கொடை அளிப்பு

பாரத் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இம்மிடிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பாரத் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இம்மிடிநாயக்கன்பள்ளி அரசுப் பள்ளிக்குரூ.1 லட்சம் நன்கொடை அளிப்பு

பாரத் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இம்மிடிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், இம்மிடிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான து.மணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியா் (பொறுப்பு) ஜோசப்ராஜ், உடற்பயிற்சி ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நன்கொடையானது, பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி, கழிவுநீா்க் கால்வாயைக் கடந்து செல்லும் வகையில் சிறு பாலம் அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி புத்தாடைகளை அவா் வழங்கி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com