தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திரத்துக்கு பேருந்துகள் நிறுத்தம்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :9 செப்டம்பர் 2023, 6:44 am

கிருஷ்ணகிரி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,  ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும், சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அவரது ஆதரவாளர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இதனால் ஆந்திர மாநிலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக ஆந்திர மாநிலத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடையேயான பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து,  ஆந்திர மாநிலம்,  திருப்பதி,  சித்தூர்,  குப்பம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள், வியாபாரிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.