கிருஷ்ணகிரி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது ஆதரவாளர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதனால் ஆந்திர மாநிலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக ஆந்திர மாநிலத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடையேயான பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள், வியாபாரிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


