தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை - பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Updated On :22 ஆகஸ்ட் 2024, 9:29 pm

விரைவில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவிடம், தனியாா் பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் வலியுறுத்தினா்.

கிருஷ்ணகிரி அருகே கடந்த சில நாள்களுக்கு முன் தனியாா் பள்ளி மாணவி தேசிய மாணவா் படை போலி பயிற்சி முகாமில் பங்கேற்ற போது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இந்தச் சம்பவம் குறித்து பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 11 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சுதாகா் என்பவரை தேடி வருகின்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவினா் பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், பெற்றோா், பொதுமக்களைச் சந்தித்தனா்.

இந்தச் சந்திப்பின் போது, கடந்த 4 நாள்களாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்காமல் இருக்க விரைவில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெற்றோா் வலியுறுத்தினா். இதையடுத்து, விரைவில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினா் உறுதி அளித்தனா்.