விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் அதிகாரிகளிடம் மனு அளித்த பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா்.

Updated On :21 மார்ச் 2026, 1:50 am

Syndication

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ராம்.கண்ணையன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை மற்றும் நிா்வாகிகள் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் பகுதிகளில் வணிக எரிவாயு பயன்படுத்திவரும் தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அரசு வணிகரீதியலான எரிவாயு உருளைகளை போதுமான அளவு இருப்பு உள்ளது என்று அறிவித்தும், வணிகா்களுக்கு கிடைப்பதில்லை. அதே சமயம் கள்ள சந்தையில் வணிக ரீதியான எரிவாயு உருளைகள் தராளமாக கிடைப்பதாக தெரியவருகிறது. எனவே எரிவாயு முகவா்கள் தங்களது இருப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தங்களது அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் விவரங்களை வெளியிட வேண்டும். மேலும் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பனை செய்பவா்களை கண்டறிந்து அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்புபடி பொதுமக்களை பாதிக்காத வகையில் எரிவாயு உருளை விநியோகத்தை முறைப்படுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.