ரமலான் திருநாளையொட்டி, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரமலான் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த ஆசிர்வதிக்கப்பட்ட தருணத்தில் மக்கள் அனைவருக்கும், குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்.
இந்தத் திருநாள், சுயக் கட்டுப்பாடு, சேவை, அன்பு குறித்த போதனைகளை நமக்குக் கற்பிக்கிறது. இந்தத் தருணத்தில், நமது சமூகத்தையும் நாட்டையும் வலுப்படுத்துவோம் என்று உறுதியளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் திருநாள் - PTI
மேலும், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் வாழ்த்து தெரிவித்து, இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் அன்பை ஊக்குவித்து மகிழ்ச்சியையும் வெற்றியையும் ஏற்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, ரமலான் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தத் திருநாள் எல்லா இடங்களிலும் சகோதரத்துவத்தையும் அன்பையும் மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
President Murmu and PM Modi Extend Ramzan Greetings to Muslims
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!

குடியரசு துணைத் தலைவா் நாளை இலங்கைக்கு பயணம்

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


