ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!

மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்துக்கு, குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல் தெரிவித்தது தொடர்பாக...

C.P. Radhakrishnan

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - ENS

Published On :

மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்துக்கு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் பா்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் வியாழக்கிழமை (ஏப்.30) மாலை சுற்றுலாப் படகு சவாரியில் 29 போ் சென்றனர். எதிா்பாராதவிதமாக பலத்த சூறைக்காற்று வீசியதில் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலியான 9 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த மாநில அமைச்சர் ராகேஷ் சிங் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், “ மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வேதனை அடைகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்தத் துயர நேரத்தில் அவர்களுக்கு மன தைரியமும் வலிமையும் கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Vice President C.P. Radhakrishnan has expressed condolences over the boat accident that occurred in Madhya Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.