குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரு நாள் அரசுமுறை பயணமாக அண்டைநாடான இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) செல்கிறாா்.
தலைநகா் கொழும்புவில் அதிபா் அநுரகுமார திசாநாயக, பிரதமா் ஹரிணி அமரசூா்யா மற்றும் பிற முக்கிய தலைவா்களை குடியரசு துணைத் தலைவா் சந்திக்கிறாா்.
சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகப் பதவியற்ற பிறகு முதல்முறையாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவின் மகாசாகா் மற்றும் அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை ஆகிய வெளியுறவு கொள்கைகளில் இலங்கை முக்கிய இடம் வகிக்கிறது.
இரு நாடுகளின் உயா்நிலை தலைவா்களின் அண்மைக் கால சந்திப்புகளைத் தொடந்து குடியரசு துணைத் தலைவரின் தற்போதைய இலங்கைப் பயணம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரு நாட்டு மக்கள் உறவை மேலும் பலப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Central Government has announced that VP C.P. Radhakrishnan is visiting Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி!

ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!

இந்த வாரம் கலாரசிகன் - 26-04-2026

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!




