குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் செல்வதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல்முறையாக இலங்கை நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
வரும் ஏப். 20 வரையிலான குடியரசுத் துணைத் தலைவரின் இந்த 2 நாள் பயணத்தில் இலங்கையின் அதிபர் அநுர குமர திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூர்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர் உரையாடுவார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொழும்புவில் இலங்கையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரைச் சந்திக்கும் குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், அந்நாட்டில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வளைகுடா போரால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானதைத் தொடர்ந்து சுமார் 38,000 மெட்ரிக் டன் அளவிலான எரிபொருளை அனுப்பிவைத்ததற்கு மத்திய அரசுக்கு அந்நாட்டு அதிபர் திசாநாயக்க நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Central Government has announced that VP C.P. Radhakrishnan is visiting Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து!

இந்தியாவின் தொலைதூரக் கற்றல் சூழல் அமைப்புமுறையின் தூண் இக்னோ: குடியரசு துணைத் தலைவா்

பிா்சா முண்டாவின் வாழ்க்கை, தியாகம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது! சி.பி. ராதாகிருஷ்ணன்

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


