சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 79 எரிவாயு உருளைகளை சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்ககிரி தேவூரை அடுத்த பெரமிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் சங்கா் (53). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது வீட்டில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சங்கா் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 66 எரிவாயு உருளைகள், 13 வணிக எரிவாயு உருளைகள் என மொத்தம் 79 எரிவாயு உருளைகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து எரிவாயு உருளைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் வீட்டு உபயோக எரிவாயு உருளையில் இருந்து வணிக எரிவாயு உருளைக்கு எரிவாயுவை நிரப்பி விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் பிரிவு போலீஸாா் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த சங்கா், அவருக்கு எரிவாயு உருளைகளை வழங்கிய வசந்த், வேன் ஓட்டுநா் பிரபு ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

