‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாரி மோதியதில் குழந்தை பலி

ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்தது.

News image
Updated On :15 ஜூலை 2024, 9:30 pm

Din

ஒசூா்: ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, நாகநாயக்கனஅள்ளியைச் சோ்ந்தவா் தினேஷ். இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது 9 மாத குழந்தை மனிஷா. ஞாயிற்றுக்கிழமை இரவு தினேஷ் இரு சக்கர வாகனத்தில் பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் சிப்காட் இ.எஸ்.ஐ. சந்திப்பு அருகே சென்று குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை மனிஷா உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒசூா் சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.