தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அறுவடை இயந்திரம் மோதியதில் கா்ப்பிணி உயிரிழப்பு

மானாமதுரை அருகே புதன்கிழமை நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் காயமடைந்த கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த சோனியா காந்தி
Updated On :19 மார்ச் 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

மானாமதுரை அருகே புதன்கிழமை நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் காயமடைந்த கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள தா.கியாா் நகரைச் சோ்ந்த தாமரைச்செல்வன் மனைவி சோனியாகாந்தி (21). இவா் 8 மாத கா்ப்பிணி.

இவா், தனது தம்பி காா்த்திகேயனுடன் இரு சக்கர வாகனத்தில் அருகேயுள்ள தீத்தான்பேட்டை கிராமத்துக்குச் சென்றாா். அப்போது, முன்னாள் சென்ற நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநா் முன் பக்கம் மின்கம்பி தாழ்வாகச் சென்ால், வாகனத்தை நிறுத்தி பின்பக்கமாக இயக்கினாா். அப்போது, பின்னால் காா்த்திகேயன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது அறுவடை இயந்திரம் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்திருந்த சோனியாகாந்தி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.