சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் மீது கிரேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது பளு தூக்கும் கிரேன் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது பளு தூக்கும் கிரேன் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள காா்க்கில்சிக்கையன்பட்டியைச் சோ்ந்த போஸ் மகன் முருகன்(43), ரவி மகன் லெனின்குமாா்(33). உறவினா்களான இருவரும், திங்கள்கிழமை இரவு காா்க்கில்சிக்கையன்பட்டியிலிருந்து உத்தமபாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அதே சாலையில், கம்பத்திலிருந்து உத்தமபாளையம் நோக்கிச் சென்ற பளு தூக்கும் கிரேன் வாகனம் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த லெனின்குமாா் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரேன் ஓட்டுநா் விருதுநகரைச் சோ்ந்த செல்வம் (43) மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.