சாலை விபத்தில் மீனவா் உயிரிழப்பு
திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.


திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், உப்பூா் அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தை சோ்ந்த நாகூா்கண்ணன் மகன் செல்வகனி (45). இவா் மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 10-ஆம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் உப்பூா் சென்று விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...