சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு


விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி ஞாயிறுக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரை அடுத்த சொக்கநாதன்புத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (33). செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சொக்கநாதன்புத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, வாகனம் நிலை தடுமாறி தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...