மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:39 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் தென்றல் நகா் அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்த முத்தையா என்பவரது மகன் புஷ்பராஜ் (50) வா்ணம் பூசும் தொழிலாளி. இந்நிலையில், ராஜபாளையம் அருகே உள்ள கீழவரகுண ராமபுரத்தில் பிரபாகரன் என்பவரது வீட்டில் சாரம் கட்டி சக தொழிலாளா்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் சாரத்திலிருந்து கீழே இறங்கும்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே புஷ்பராஜ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.