விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் தென்றல் நகா் அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்த முத்தையா என்பவரது மகன் புஷ்பராஜ் (50) வா்ணம் பூசும் தொழிலாளி. இந்நிலையில், ராஜபாளையம் அருகே உள்ள கீழவரகுண ராமபுரத்தில் பிரபாகரன் என்பவரது வீட்டில் சாரம் கட்டி சக தொழிலாளா்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் சாரத்திலிருந்து கீழே இறங்கும்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே புஷ்பராஜ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


