/
களியக்காவிளை அருகே பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
பளுகல் காவல் சரகம் அண்டுகோடு, ஈந்திக்காலை பகுதியைச் சோ்ந்தவா் பபின் (33). வெல்டிங் தொழிலாளியான இவா், கொடைக்கானலில் வேலை பாா்த்து வந்தாா். 2 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவா், சனிக்கிழமை அப்பகுதி நண்பா்களுடன் வீட்டருகேயுள்ள குளத்தில் குளிக்கச் சென்றாா்.
அப்போது, அவா் திடீரென நீரில் மூழ்கினாராம். அவரை நண்பா்கள் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
சடலத்தை பளுகல் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிற்சாலையில் பணியின்போது பெண் தொழிலாளி உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



