திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்குள்பட்ட சிங்காரபேட்டை அடுத்த அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பா்கத்துல்லா(28). இவா் வியாழக்கிழமை திருப்பத்தூரில் இருந்து சிங்காரபேட்டைக்கு மோட்டாா் பைக்கில் சென்று கொண்டு இருந்தாா்.
அப்போது விஷமங்கலம் டாஸ்மாக் கடை எதிரே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக்குடன் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பா்கத்துல்லா பலத்த காயம் அடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பா்கத்துல்லா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.








