மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:26 pm

கோவில்பட்டி, ஏப். 27: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை, செஞ்சி காலனியைச் சோ்ந்தவா் மோகன் மகள் ஐஸ்வா்யா (29). இவா் ஓட்டிச் சென்ற காா் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அடுத்த ராஜா புதுக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரைத் தாண்டி பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த ஐஸ்வா்யா, திருநெல்வேலியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிச்செல்வம் (29), திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் கணேஷ் (26) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

அவா்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரிச்செல்வம் உயிரிழந்தாா். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.