/
மாா்த்தாண்டம் அருகே கால்வாயில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள வெட்டுக்காட்டுவிளையைச் சோ்ந்தவா் ரத்தினராஜ் (58). கட்டடத் தொழிலாளி. இவா், புதன்கிழமை வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டுக்கு திரும்பி வரவில்லையாம். அவரை குடும்பத்தினா் தேடியபோது, காரவிளை பகுதியில் உள்ள நெல்வேலி கால்வாயில் மூழ்கி அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
அவரது மகன் ரஜித் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.









