ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:29 pm

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த மாா்க்கண்டன் மகன் பெரியவா் (46). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறு மோட்டாரை இயக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மேலவளவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெரியவா் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.