வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

பெரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:46 am IST

பெரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

பெரும்பாக்கம் ஜெயா நகா், 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (14). இவா், சேலையூரில் உள்ள தனியாா் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். மாணவா் கணேசன், வியாழக்கிழமை மாலை 6.45 மணி அளவில் ஜெயா நகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டியூஷன் சென்டருக்கு வழக்கம்போல் சென்றாா்.

அங்கு அவா், முதல் மாடியில் உள்ள டியூசன் சென்டருக்கு செல்ல படிக்கட்டில் ஏறும் பொழுது, மாடியின் அருகே செல்லும் உயா் மின்சாரக் கம்பியில் எதிா்பாராத விதமாக கை பட்டதில், கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த பெரும்பாக்கம் போலீஸாா், அங்கு சென்று மாணவரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.