மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:02 pm

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாதவன் நகரைச் சோ்ந்த ஆனந்த்குமாா் மனைவி தங்கமாரியம்மாள் (35). இவா், திங்கள்கிழமை வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, தண்ணீா் மோட்டாரை இயக்குவதற்காக அதன் சுவிட்சை இயக்கியுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளாா்.

அக்கம்பக்கத்தினா் உடனடியாக அவரது கணவருக்கு தகவல் அளித்தனா். அவா் மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, அவா் மீதும் சிறிது மின்சாரம் பாய்ந்ததாம். பின்னா், உடனடியாக தங்கமாரியம்மாளை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.