கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொ.லெனின் (31). இவா் பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லெனின் தனது நண்பா்களுடன் மாடூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றாா்.
அவரது நண்பா் து.கந்தசாமி விளை நிலத்தில் இருந்த மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் எடுத்து ஏரியில் மீன் பிடித்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து லெனின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


