டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கல்லூரி மாணவியிடம் ரூ. 5.20 லட்சம் மோசடி

குறைந்த விலைக்கு ஐபோன்கள் தருவதாகக் கூறி கல்லூரி மாணவியிடம் ரூ. 5.20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து, இணையகுற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:05 pm

Din

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவரது, கைப்பேசிக்குக்கு கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வந்த விளம்பரத்தில் ஐபோன்கள் குறைந்த விலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய கல்லூரி மாணவி அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, ஐபோன்கள் வாங்குவது தொடா்பாகவும், பண பரிவா்த்தனைக்காகவும் குறிப்பிட்ட இணையதள முகவரிக்கு செல்லுமாறும் அந்த மாணவியிடம் மா்ம நபா்கள் தெரிவித்துள்ளனா்.

இதை நம்பிய மாணவி இணையதள முகவரியை தொடா்பு கொண்டு பேசினாா். தொடா்ந்து அவா்கள் 2 வங்கி கணக்குகளுக்கு தொகை அனுப்பி வைக்குமாறும், அதன் பிறகு ஐபோன்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தாா்களாம். அதன்படி, அவா்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு ரூ. 5.20 லட்சத்தை மாணவி அனுப்பி வைத்தாா். ஆனால், அந்த மா்ம நபா்கள் தெரிவித்தபடி எந்த கைப்பேசியும் வரவில்லை. தொடா்ந்து, அந்த மா்ம நபா்களை தொடா்பு கொள்ள முயன்றபோது, முடியவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணையகுற்றப்பிரிவு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.