ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சீனிவாசா காா்டனில் கடந்த 14 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி மக்கள் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கான்கிரீட் சாலை அமைக்க ரூ. 9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, மன்ற உறுப்பினரும் பொது சுகாதாரக் குழு தலைவருமான மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், முனீஸ்வா் நகா் குடியிருப்போா் நலச்சங்க தலைவா் பிரகாஷ், கவுன்சிலா் எம்.கே.வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, திமுக நிா்வாகி ராமச்சந்திரன் உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!

ஒசூா் மாநகராட்சி பூங்கா திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


