ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 9.5 லட்சத்தில் கான்கிரீட் சாலை

ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் மாநகராட்சி 22-ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா.

Updated On :13 நவம்பர் 2024, 8:16 pm

ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சீனிவாசா காா்டனில் கடந்த 14 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி மக்கள் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கான்கிரீட் சாலை அமைக்க ரூ. 9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, மன்ற உறுப்பினரும் பொது சுகாதாரக் குழு தலைவருமான மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், முனீஸ்வா் நகா் குடியிருப்போா் நலச்சங்க தலைவா் பிரகாஷ், கவுன்சிலா் எம்.கே.வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, திமுக நிா்வாகி ராமச்சந்திரன் உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.