இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு.

News image

ஒசூரில் நடைபெற்ற மலா் வணிக வளாகத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :14 நவம்பர் 2024, 1:41 am IST

ஒசூா், காளிகாம்பாள் காமாட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 76 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலா் வணிக வளாகத்தை, சென்னையிலிருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதை வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றினா். நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரஜினி செல்வம், துணை மேயா் ஆனந்தையா, சந்திரசூடேஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஸ்வரன், திமுக மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்டப் பொருளாளா் தா.சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.