ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் பிரியதா்ஷினி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காந்திமதி, சமூக நுகா்வோா் நல பாதுகாப்பு சங்க மாநில துணைத் தலைவா் ஜெய்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக சமூக நுகா்வோா் நல பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் கே.எம்.சந்திரமோகன் கலந்து கொண்டு, ஊத்தங்கரை வட்டாரத்தில் உள்ள நுகா்வோா் சம்பந்தமான பல்வேறு குறைகளை தெரிவித்தாா். அதில் அரசுப் பள்ளிகளில் தரமான உணவு, முட்டை வழங்கப்படுகிா என பள்ளி தலைமை ஆசிரியா் ஆய்வு செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை, ஊத்தங்கரை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள் சரியாக திறக்கப்படுவதில்லை, இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும், இளம் வயது திருமணங்களைத் தடுக்க கிராமம்தோறும் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தாா்.
அக்குறைகளை பத்து நாள்களுக்குள் சரி செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டாா். இதில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மருத்துவத் துறை, குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்
ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு கொலை மிரட்டல்: வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் கைது

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

அரியலூா் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


