15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஒசூா் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.2.41 லட்சம் பறிமுதல்!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா்.

தமிழக எல்லையான ஒசூா் அருகே உள்ள சூசூவாடியில் உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அண்டை மாநிலங்களிலிருந்து வரக்கூடிய சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் சூசூவாடியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் உரிமம் பெறுவதோடு, வரி செலுத்த வேண்டும்; அவ்வாறு வரி செலுத்தும்போது வாகனங்களில் கூடுதலாக பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் சூசூவாடி சோதனைச் சாவடியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா்.

இதுதொடா்பாக அப்போது பணியிலிருந்த மோட்டாா் வாகன அலுவலக நோ்முக உதவியாளா் காயத்ரியிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.