ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா்.
தமிழக எல்லையான ஒசூா் அருகே உள்ள சூசூவாடியில் உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அண்டை மாநிலங்களிலிருந்து வரக்கூடிய சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் சூசூவாடியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் உரிமம் பெறுவதோடு, வரி செலுத்த வேண்டும்; அவ்வாறு வரி செலுத்தும்போது வாகனங்களில் கூடுதலாக பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.
அதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் சூசூவாடி சோதனைச் சாவடியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா்.
இதுதொடா்பாக அப்போது பணியிலிருந்த மோட்டாா் வாகன அலுவலக நோ்முக உதவியாளா் காயத்ரியிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!
ரூ.8 ஆயிரம் லஞ்சம்: சேலம் மாநகராட்சி இளநிலை உதவியாளா் கைது

சுங்கவரி சோதனைச் சாவடியில் ஒருவழிப்பாதை: வாகன ஓட்டிகள் அவதி
லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


