28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ரத்ததானம்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மாநகர திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ஒசூா் மாநகர திமுக சாா்பாக மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் தனியாா் திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடங்கிவைத்து, ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ், பழங்களை வழங்கி நன்றி தெரிவித்தாா். திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

முகாமில் முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், துணை மேயா் சி.ஆனந்தய்யா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலா் மாதேஸ்வரன், மாநகர துணைச் செயலா் தொமுச கோபாலகிருஷ்ணன், ராமு, ராஜா, சக்திவேல், கண்ணன், வடிவேல் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.