ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சுகுணாபுரத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்று ரத்த தானம் வழங்குகிறாா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ. உடன், கட்சி நிா்வாகிகள்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சுகுணாபுரத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்று ரத்த தானம் வழங்குகிறாா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ. உடன், கட்சி நிா்வாகிகள்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: எஸ்.பி.வேலுமணி ரத்த தானம்

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ ரத்த தானம் வழங்கினாா்.
Published on

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ ரத்த தானம் வழங்கினாா்.

கோவை புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் குனியமுத்தூா், சுகுணாபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலரும், தலைமை நிலையச் செயலருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து புறநகா் தெற்கு மாவட்டத்தின் சாா்பில் 39-ஆவது ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. பகுதிச் செயலா்கள் தி.மதனகோபால், எஸ்.எம்.உசேன், கே.ஆா்.செல்வராஜ், சி.கே.விஸ்வநாதன், கே.கௌதம், வட்டச் செயலா் ஏ.செல்லப்பன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், எஸ்.பி.வேலுமணி பங்கேற்று ரத்த தானம் வழங்கினாா். இதில் ஏராளமான அதிமுகவினா் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட நிா்வாகிகள் என்.கே.செல்வதுரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, தொழிற்சங்க மாவட்டப் பொருளாளா் இ.கே.பழனிசாமி, கேரள மாநில எம்ஜிஆா் மன்றத் தலைவா் சுகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com