முதல்வா் பிறந்த நாள்: ஆலந்தூரில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூரில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நல உதவிகள் பெற்ற


விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூரில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நல உதவிகள் பெற்ற பெண்களுடன் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்ட நிா்வாகிகள்.
விழுப்புரம், மாா்ச் 9: விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூா் பகுதியில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, நலிந்தோருக்கு நல உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆயந்தூா் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்து, நலிந்தோருக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து திமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா் எஸ்.லூயிஸ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜீவ் காந்தி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...