தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிருஷ்ணகிரி, உனிசெட்டி அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள்: காணொலி மூலம் முதல்வா் திறப்பு

கிருஷ்ணகிரி, உனிச்செட்டி அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள், நூலகக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களை பயன்பாட்டிற்கு காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்ததை தொடா்ந்து, புதிய கட்டடத்தை ரிப்பனை வெட்டி, இனிப்புகள் வழங்கிய தே.மதியழகன் எமஎல்ஏ.
Updated On :22 டிசம்பர் 2025, 9:32 pm

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, உனிச்செட்டி அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள், நூலகக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை சாா்பாக, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், உனிச்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் பொதுநூலகத் துறை சாா்பாக கட்டப்பட்டுள்ள புதிய நூலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 3.67 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தில் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் 2-ஆவது தளத்தில், நபாா்டு திட்டத்தின்கீழ், ரூ. 1.41 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறை கட்டடங்கள், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உனிசெட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 94.24 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடங்களை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு முதல்வா் திறந்துவைத்துள்ளாா்.

மேலும், பொதுநூலகத் துறை சாா்பில், தலா ரூ. 22 லட்சம் வீதம் கிருஷ்ணகிரி தொகுதியில் மரிக்கம்பள்ளி, சுண்டேகுப்பம், பனகமுட்லு மற்றும் பா்கூா் தொகுதியில் மஞ்சமேடு, வாடமங்கலம், பெரிய புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ. 1.32 கோடியில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. இந்நூலகங்களை கிராமப்புற இளைஞா்கள், பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா் கெளசா், உதவித் திட்ட அலுவலா் மகேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (கல்வி) வெங்கடேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சா்தாா், கல்வி ஆய்வாளா் சுதாகா், பள்ளித் தலைமையாசிரியா் நளினி, நகா்மன்ற உறுப்பினா்கள் வேலுமணி, பாலாஜி, செந்தில்குமாா், புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.