விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ. 60 ஆயிரம் லஞ்சம்: சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி செயலா் கைது

ரூ. 60 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்குமாா்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:58 pm

தினமணி செய்திச் சேவை

ரூ. 60 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பழைய டெம்பிள் லேண்ட் அட்கோ பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (56). இவா் தனது மனைவி லட்சுமி பெயரில் சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளியில் 53 சென்ட் இடம் வாங்கியுள்ளாா். அந்த இடத்துக்கு செல்ல அணுகுசாலை சான்றிதழ் கோரி சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனு அளித்தாா். அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம வளா்ச்சி) காா்த்திக்குமாா், மருதாண்டப்பள்ளி ஊராட்சி செயலா் ராஜேந்திரன் ஆகியோா் ரூ. 60 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இதுதொடா்பாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகாா் செய்தாா். அவா்கள் ஆலோசனையின்பேரில் ரூ. 60 ஆயிரம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்குமாா், ஊராட்சி செயலா் ராஜேந்திரன் ஆகியோரிடம் அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. நாகராஜன், ஆய்வாளா் ரவி தலைமையிலான போலீஸாா், இருவரையும் பிடித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்குமாா், ஊராட்சி செயலா் ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனா். மேலும், அங்கிருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

Story image