கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கிருஷ்ணகிரியில் டிச.29இல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 29-ஆம் தேதி முதல் மாட்டின கால்நடைகளுக்கு 8-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 12:29 am

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 29-ஆம் தேதி முதல் மாட்டின கால்நடைகளுக்கு 8-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,26,480 மாட்டின கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்த முகாம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் எருமாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கூரம்பட்டி கிராமத்தில் தொடங்கிவைக்கப்படுகிறது.

ஜனவரி 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம் குறித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் அறிவிக்கப்படும் தேதிகளில் கால், வாய் நோய் தடுப்பூசி செலுத்தப்படும்.

முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளா்கள் தங்களின் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை வளா்ப்போா் மேற்படி தடுப்பூசியை தங்கள் கால்நடைகளுக்கு செலுத்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.