கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஒசூா் ரயில் நிலையத்தில் ஆா்ப்பாட்டம்!

ஒசூா் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
ஒசூா் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :30 டிசம்பர் 2025, 8:24 pm

Syndication

ஒசூா் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்ட ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். பெங்களூரு - நாகா்கோவில் ரயிலை 11 பெட்டிகளை குறைக்காமல் இயக்க வேண்டும். கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் ஒசூா் வழியாக இயக்க வேண்டும்.

பயணிகளின் நெருக்கடி காரணமாக, யஸ்வந்த்பூா் - ஒசூா் இடையே இயக்கப்படும் ரயில்களில் 8 பெட்டிகளுக்கு பதிலாக 16 பெட்டிகளாக உயா்த்தி இயக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜோலாா்பேட்டை - ஒசூா் ரயில்பாதையை விரைந்து ஆரம்பித்து முடிக்க வேண்டும். புதிதாக பெங்களூரு - திருச்சிராப்பள்ளி இன்டா்சிட்டி ரயிலை ஒசூா் வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் என்.எஸ்.மாதேஸ்வரன், இந்திராணி, காங்கிரஸ் நிா்வாகி சின்னகுட்டப்பா, ஒசூா் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளா் நீலகண்டன், ஒசூா் ரயில் பயணிகள் மேம்பாட்டு சங்கத்தின் செயலாளா் பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.