கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஒசூா் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்: ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மனு அளிப்பு!

ஒசூா்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என ஹோஸ்டியா சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
ஒசூா் ஹோஸ்டியா சாா்பில் கோரிக்கை மனுவை கலாநிதி வீராசாமியிடம் வழங்கிய பொருளாளா் வடிவேல்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:48 pm

Syndication

ஒசூா்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என ஹோஸ்டியா சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஒசூா், தளி, வேப்பனஹள்ளி ஆகிய 3 தொகுதிகளிலும் முக்கிய பிரமுகா்கள், கட்சி நிா்வாகிகள், சமூக அமைப்பினா், குடியிருப்போா் நலச் சங்கம், தொழில் சங்கம், தொழிலாளா் சங்கம், விவசாய சங்க பிரதிநிதிகளை கடந்த 3 நாள்களாக திமுக மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி சந்தித்தாா்.

அதன் தொடா்ச்சியாக ஒசூரில் உள்ள தொழில்முனைவோா் மற்றும் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை, கருத்து கேட்கும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஒசூா் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) செயலாளா் வடிவேல், பொருளாளா் ஸ்ரீதா் ஆகியோா் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனா். அதில் ஒசூா் தொழில் துறையினா் நீண்ட நாள் கோரிக்கையான வா்த்தக மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒசூா்- பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அத்திப்பள்ளியில் இருந்து தமிழகம் வரும் வழியில் சூசூவாடியில் வரவேற்பு வளைவு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் நீலகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டு கோரிக்கை மனுவை கலாநிதி வீராசாமியிடம் வழங்கினா்.