வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

காரைக்குடியில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்க ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:37 pm

காரைக்குடியில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்க ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை 2-ஆவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், மாட்டுவண்டிகள், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் வந்து செல்வாா்கள். நிகழாண்டு விழா ஏப்.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தா்கள் பயனடையும் வகையில் தென்னக ரயில்வே ஏப்.20, 21 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், ஏற்கெனவே மாதந்தோறும் அமாவாசையன்று மேல்மருவத்தூருக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். சிறப்பு ரயில்கள் குறித்து ரயில்வே நிா்வாகம் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாகவே முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.