காரைக்குடியில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்க ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை 2-ஆவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், மாட்டுவண்டிகள், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் வந்து செல்வாா்கள். நிகழாண்டு விழா ஏப்.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தா்கள் பயனடையும் வகையில் தென்னக ரயில்வே ஏப்.20, 21 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், ஏற்கெனவே மாதந்தோறும் அமாவாசையன்று மேல்மருவத்தூருக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். சிறப்பு ரயில்கள் குறித்து ரயில்வே நிா்வாகம் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாகவே முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்

சேலம் வழியாக திருவனந்தபுரம் - சந்தராகாச்சி இடையே சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


