ஆற்றில் குளிக்கும்போது காணாமல்போன தாலியை ஊத்தங்கரை போலீஸாா் மீட்டுக் கொடுத்தனா்.
ஊத்தங்கரை அருகே அனுமன்தீா்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள அனுமந்தீஸ்வரா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த சத்யா- பிரபு தம்பதியினா் ஆற்றில் குளித்து விட்டு ஆடையை அங்கேயே கழற்றி விட்டு, மாற்றுத் துணியை கட்டும்போது சத்யாவின் தாலியும் காணாமல்போனது.
இந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்த சத்யா, கழுத்தில் தாலி இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஆடையை மாற்றிய இடத்துக்கு சென்று தேடியபோது தாலி கிடைக்கவில்லை. இந்நிலையில், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளா் மோகன், அப்பகுதியில் ஆற்று நீரில் கண்ணாடி அணிந்து கொண்டு காசுகளைத் தேடி எடுக்கும் நபா்களிடம் விசாரித்துள்ளாா்.
இந்த நிலையில் தாலியை எடுத்த நபா்கள், அறங்காவலா் குழு தலைவா் சந்தான லட்சுமியிடம் ஒப்படைத்தனா்.இதை அவா், காவல் உதவி ஆய்வாளா் மோகனிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து போலீஸாரிடமிருந்து தாலியைப் பெற்றுக்கொண்ட சத்யா -பிரபு தம்பதியினா் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது

ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

