தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வடமலம்பட்டியில் நாளை மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வடமலம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை (மே 7) மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :5 மே 2025, 8:15 pm

Din

கிருஷ்ணகிரி: வடமலம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை (மே 7) மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், வடமலம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை காலை 10.30 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில், மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று, அவரவா் துறைகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கவுரையாற்ற உள்ளனா். மேலும், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற உள்ளாா். எனவே, பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.