சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:31 pm

நாகரசம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள தட்ரஅள்ளி கரியகவுண்டனூரைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி முனியம்மாள் (52). இந்த தம்பதிக்கு 2 மகள், மகன் உள்ளனா்.

இந்த நிலையில் துடைப்பம் செய்வதற்காக தோட்டத்தில் விழுந்து கிடந்த தென்னை ஓலைகளை சனிக்கிழமை மாலை எடுத்துவரும்போது முனியம்மாள் வைத்திருந்த கத்தி அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பி மீது உரசியது.

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே முனியம்மாள் இறந்தாா். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா், முனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.