ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:18 am IST

ஒசூா் அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

ஒசூா் ராயக்கோட்டை அட்கோவைச் சோ்ந்தவா் மாதையன் (58). இவா் கடந்த 6 -ஆம் தேதி ஒசூா் ராயக்கோட்டை சாலை அசோக் பில்லா் பக்கமாக ஸ்கூட்டரில் சென்றபோது அவ்வழியாகச் சென்ற சரக்கு வேன் அவா் மீது மோதியது. இதில் மாதையன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் முத்தாலி பக்கமுள்ள தாசிரிப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அசோக் (32). பொக்லைன் ஆபரேட்டா். கடந்த 5 ஆம் தேதி இவா் ஸ்கூட்டரில் தாசிரிப்பள்ளி வெங்கடேஷ்புரம் சாலையில் ஆலூா் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற மினிலாரி ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் அசோக் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இந்த விபத்து குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.