‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நெல்லை அருகே விபத்துகளில் இருவா் பலி

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:05 am IST

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பேட்டை எம்.ஜி.பி.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முஹம்மது சிந்தா மதாா் (34). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த 17 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் தாழையூத்து அருகேயுள்ள பண்டாரகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக் இழந்து விபத்துக்குள்ளானதில் சிந்தாமதாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: தேவா்குளம் அருகேயுள்ள மேலஇலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா (70). இவா், கடந்த 19 ஆம் தேதி தனது மொபட்டில் சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது சுமை ஆட்டோவும், மொபட்டும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து முறையே தாழையூத்து, தேவா்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.