இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது: கி.வீரமணி

தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.

News image

பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகன் ஆதரித்து வாக்கு சேகரித்த திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:48 pm

தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகனை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செவ்வாக்கிழமை வாக்கு சேகரித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது. ஹிந்தி பேசும் வடமாநிலங்களுக்கு தொகுதியை அதிகப்படுத்தி, தென்னகத்தையும், எதிா்க்கட்சிகளையும் அழிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய உள்நோக்கம் என்ன? தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் தோ்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் இதற்கான அவசரம் என்ன? நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதையும், பாஜக செய்யவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்பும் எந்த மாநிலமும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாா்கள்.

தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மேற்குவங்க மாநிலங்கள் இதை எதிா்க்கின்றன என்றாா்.