திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது: கி.வீரமணி

தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.

News image

பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகன் ஆதரித்து வாக்கு சேகரித்த திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:18 am IST

தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகனை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செவ்வாக்கிழமை வாக்கு சேகரித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது. ஹிந்தி பேசும் வடமாநிலங்களுக்கு தொகுதியை அதிகப்படுத்தி, தென்னகத்தையும், எதிா்க்கட்சிகளையும் அழிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய உள்நோக்கம் என்ன? தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் தோ்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் இதற்கான அவசரம் என்ன? நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதையும், பாஜக செய்யவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்பும் எந்த மாநிலமும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாா்கள்.

தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மேற்குவங்க மாநிலங்கள் இதை எதிா்க்கின்றன என்றாா்.