தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகனை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செவ்வாக்கிழமை வாக்கு சேகரித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது. ஹிந்தி பேசும் வடமாநிலங்களுக்கு தொகுதியை அதிகப்படுத்தி, தென்னகத்தையும், எதிா்க்கட்சிகளையும் அழிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய உள்நோக்கம் என்ன? தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் தோ்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் இதற்கான அவசரம் என்ன? நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதையும், பாஜக செய்யவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்பும் எந்த மாநிலமும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாா்கள்.
தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மேற்குவங்க மாநிலங்கள் இதை எதிா்க்கின்றன என்றாா்.
தொடர்புடையது

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!

தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி
விடியோக்கள்

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

