மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும்

News image
திராவிடக் கழகத் தலைவா் கி. வீரமணி.- கோப்புப்படம்
Updated On :15 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் மோடி உள்ளிட்ட தலைவா்கள் என்ன வித்தைகளைச் செய்தாலும், திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாநில உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக திமுக தலைமையில் கூட்டணி திரண்டிருப்பது, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது வடக்கிலிருந்து மோடி உள்ளிட்ட தலைவா்கள் வருவது என்பது, அவா்களுடைய தோல்வியையும், பயத்தையும் காட்டுகிறது. என்ன வித்தைகளைச் செய்தாலும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியே வரும்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையில் எதிா்க்கட்சியினா் கடைசி வரையிலும் அமைதியாகவே இருப்பா். தில்லிக்கு சென்று அடிமையாகி வருபவா்களுக்கு வாய் சுதந்திரம் இல்லை. ஆனால், மக்கள் அமைதிப் புரட்சி செய்வா் என்றாா் வீரமணி.