எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் நம்பிக்கை

தமிழகத்தில் திமுக அரசின் நலத் திட்டங்களால் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

News image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த தேவனூா் கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கை பதிவு செய்த குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:54 am IST

தமிழகத்தில் திமுக அரசின் நலத் திட்டங்களால் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் சா.சி. சிவசங்கா், தனது வாக்கை அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த தேவனூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை பதிவு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று, முதல்வா் ஸ்டாலின் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்பாா்.

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல இடங்களில் சந்தேகத்தை எழுப்புகின்றன. இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகள் எல்லா சந்தேகங்களுக்கும் மூலக் காரணமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அதிகாரிகளை எந்தத் தேவையுமின்றி மாற்றி உள்ளனா். குறிப்பாக, கடைசி 2 நாள்களில் மாற்றுவது எல்லாரிடமும் ஒரு அச்சத்தை உண்டாக்குவதற்கான நடவடிக்கையாக தோன்றுகிறது என்றாா்.

தமிழகத்தில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதும், தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதும் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா் சிவசங்கா், அதிமுக வேட்பாளா்கள் தொடா்புடைய பல இடங்களிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், வேறுபல கட்சியினரின் இடங்களிலிருந்தும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவே இதற்கு காரணம் என்று ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது என்றாா்.