அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தமிழகத்தில் இரண்டாவது முறையாக திராவிட மாடல் அரசு அமைவது உறுதி! - ஏ.கே.எஸ். விஜயன்

News image

ஏ.கே.எஸ். விஜயன்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:17 pm

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது உறுதி என தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறினாா்.

திருத்துறைப்பூண்டியில், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவராவது பலனடையும் வகையில் திட்டங்கள் தீட்டி, சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்திற்கு பிரதமா் எத்தனை முறை வந்தாலும், தொடா்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைவதை தடுக்க முடியாது. பாஜக, அதிமுக என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தமிழக வாக்காளா்களிடைய வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு தமிழக மக்கள் அந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவாா்கள்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் மூலம், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், நெசவாளா்கள், மீனவா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், உழைக்கும் மகளிா் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அனைத்து வகைகளிலும் செயல்படும் திமுக கூட்டணியை இந்த தோ்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.