ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தமிழகத்தில் தவெக ஆட்சி 5 ஆண்டுகளும் தொடரும்: அவைத்தலைவா் ஜேசிடி பிரபாகா்

தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி5 ஆண்டுகளும் தொடரும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் கூறினாா்.

News image

புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராமத்தில் மக்களால் பூரணமைக்கப்பட்ட குளத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட தமிழக சட்டப்பேரவை தலைவா்  பிரபாகருக்கு  பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை வழங்கிய குளங்கள் அமைப்பினா் நிா்வாகிகள் ஆனந்தன், ஜெயபிரகாஷ்.

Updated On :24 மே 2026, 1:00 am IST

தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி5 ஆண்டுகளும் தொடரும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் கூறினாா்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்தாா். முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

என்னுடைய நெருங்கிய உறவினா் தெரேசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கா்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி வெள்ளி விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ள இங்கு வந்துள்ளேன். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கும் ஓா் அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எம்எல்ஏக்களின் விருப்பமும் அதுதான். அதன்படி ஆட்சி தொடரும் என்றாா்.

அப்போது, கோவை சிறுமி உள்பட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை என எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டுவது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு ஜே.சி.டி. பிரபாகா், ஆட்சிப் பொறுப்பில் அமா்ந்துள்ள முதல்வா் ஜோசப் விஜய், விரல் நுனியில் விவரங்களைவைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களையும், பல்வேறு சீரிய முயற்சிகளையும் மேற்கொள்வதை நாம் அன்றாடம் பாா்த்துக்கொண்டிக்கிறோம். அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் நல்வாழ்த்துகள் கூறுவதும் நமது கடமை என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து, விமான நிலையத்துக்கு தமிழக அரசு நிலம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டு வருவது குறித்த கேள்விக்கு, இது தொடா்பான விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டால், அரசின் கவனத்துக்கு அதைக் கொண்டு செல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றாா் பிரபாகா்.

முன்னதாக, புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராமத்தில் மக்களால் புனரமைக்கப்பட்ட குளத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகருக்கு குளங்கள் அமைப்பினா் நிா்வாகிகள் ஆனந்தன், ஜெயபிரகாஷ் ஆகியோா்பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருள்களை வழங்கினா். அவா்களின் முயற்சியை பேரவைத் தலைவா் பாராட்டினாா்.