கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி

கோவை சிறுமி கொலை குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி விளக்கம்...

News image

மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி - X

Updated On :23 மே 2026, 4:06 pm IST

கோவை சூலூர் அருகே கொலை செய்யப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது உடற்கூராய்வில் உறுதியாகியுள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூறினார்.

இதுபற்றி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த ஐ.ஜி. ரம்யா பாரதி,

"மே 21 ஆம் தேதி 10 வயது சிறுமி காணாமல் போனதாக இரவு 8.30 மணியளவில் கோவை சூலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பள்ளபாளையம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் இரவு 10 மணிக்கு வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகளை அமைத்து தேடினோம். 250 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பக்கத்து வீட்டுக்காரரான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி(33) கடத்தியுள்ளது தெரிய வந்தது. அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்துள்ளார்.

குற்றவாளி கார்த்தி | மோகன் ராஜ்

குற்றவாளி கார்த்தி | மோகன் ராஜ்

பின்னர் தலைமறைவாக இருந்த கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். தப்பிக்க முயன்றபோது காலில் அடிபட்டுள்ளதால் கோவை மருத்துவக் கல்லூரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தி ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கார்த்திக்கு துணையாக இருந்த அவரது நண்பர் மோகன் ராஜும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கூலித் தொழிலாளிகள்.

சிறுமியின் குடும்பத்தினருடன் சேர்ந்து குற்றவாளி கார்த்தியும் சிறுமியைத் தேடியுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது உடற்கூராய்வில் உறுதியாகியுள்ளது.

குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திாிகை விரைவாக தயாாிக்கப்பட்டு வழக்கை விரைவாக நடத்தி, விரைந்து தண்டனை பெற்றுத் தரப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த பேட்டியின்போது கோவை சரக டிஐஜி சாமிநாதன், கோவை மாவட்ட எஸ்.பி. பவன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Coimbatore Girl Sexually Assaulted and Murdered: IG Interview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.