சென்னையில் கடந்த மூன்று நாள்களாக வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாள்களாக 107 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டி வந்தது. ஆனால் இன்று காலை 7 மணிக்கு வழக்கம் போல உக்கிரத்துடன் உதிக்க வேண்டிய சூரியன் சற்று ஓய்வு எடுப்பது போல தோன்றியது.
இதனால், கடந்த 3 நாள்களாக வெப்பத்தில் வாடிய மக்கள் இன்றாவது வெய்யிலிருந்து விடுதலை கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் தங்களது அன்றாடப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, இன்று காலை 7 மணியளவில் திடீரென பல இடங்களில் சூறைக்காற்று வீசியது.
சென்னை மெரினா கடற்கரையில் சூறைக்காற்று வீசியதால் புழுதிப் புயல் ஏற்படும் நிலை உருவானது. இதனால், ஏதேனும் அசம்பாவிதம் நேரிடுமோ என்ற முன்னெச்சரிக்கைக்காக, சென்னை மெரினா கடற்கரையில் காலை வேளையை அனுபவிக்கச் சென்றவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








