தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

சென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது, மெரினாவில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் அவதி.

News image

மேக மூட்டம் - Center-Center-Chennai

Updated On :23 மே 2026, 11:39 am IST

சென்னையில் கடந்த மூன்று நாள்களாக வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாள்களாக 107 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டி வந்தது. ஆனால் இன்று காலை 7 மணிக்கு வழக்கம் போல உக்கிரத்துடன் உதிக்க வேண்டிய சூரியன் சற்று ஓய்வு எடுப்பது போல தோன்றியது.

இதனால், கடந்த 3 நாள்களாக வெப்பத்தில் வாடிய மக்கள் இன்றாவது வெய்யிலிருந்து விடுதலை கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் தங்களது அன்றாடப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதற்கிடையே, இன்று காலை 7 மணியளவில் திடீரென பல இடங்களில் சூறைக்காற்று வீசியது.

சென்னை மெரினா கடற்கரையில் சூறைக்காற்று வீசியதால் புழுதிப் புயல் ஏற்படும் நிலை உருவானது. இதனால், ஏதேனும் அசம்பாவிதம் நேரிடுமோ என்ற முன்னெச்சரிக்கைக்காக, சென்னை மெரினா கடற்கரையில் காலை வேளையை அனுபவிக்கச் சென்றவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.